2015ஆம் ஆண்டு வெளியான ஹாரர் திரைப்படம் டிமான்டி காலனி. இந்தப் படத்தினை அஜய் ஞானமுத்து எழுதி இயக்கியிருந்தார். இந்த படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த், அபிசேக் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் நல்ல வெற்றி படமாகவே அமைந்திருந்தது . அதனை தொடர்ந்து டிமான்டி காலனி 2 படத்தின் அறிவிப்பினை மக்கள் எதிர்பார்த்தனர். அதன்பிறகு ஒரு சில தகவல்கள் இந்த படத்தினை பற்றி வெளியானயானது . மீண்டும் இந்த படத்திலும் அருள்நிதியே கதாநாயகனாகவும் , பிரியா பவானி சங்கர் கதையின் நாயகியாகவும் நடிக்கிறார்கள் எனவும், முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இராண்டாம் பாகத்தியும் இயக்கியுள்ளார் என்றும் தகவல் வெளியானது.
டிமான்டி காலனி 2 படத்தின் டிரெயிலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் எனவும் அத்துடன் இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகயுள்ளது எனவும் படக்குழு அறிவித்துள்ளது. இதன், ஃபர்ஸ்ட் லுக் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.