28
ஜுன் மாதம் வெளியான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. “நித்திலன் சுவாமிநாதன்” இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியிருந்தது. தந்தை, மகள் இருவரின் பாசக்கதையாக ஒரு புறமும், மறுபுறம் மகளுக்காக பழிவாங்க துடிக்கும் ஒரு தந்தையாகவும் இந்த கதைக்களம் அமைந்திருந்தது. 2024 இன் அதிக வசூல் செய்த தமிழ் படமாக மகாராஜா திரைப்படம் அமைந்திருந்தது. இப்பொழுது, மகாராஜா இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் அவர்கள் இயக்கத்தில் நயன்தாராவின் அடுத்த திரைப்படம் உருவாகயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.