நம் நாடு ஆங்கிலேயர் ஆட்சியிருந்து 1947, ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் அடைந்தது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15, அன்று நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களுக்காக நம் நாட்டின் தேசிய கொடி ஏற்றி அவர்களுக்கு மரியாதை செலுத்தப்படும். இதில், நம் நாட்டின் பிரதமர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் கொடி ஏற்றி அந்த வருடம் நாட்டின் முன்னேற்றங்களையும், சிறப்புகளையும் கூறி உரை நிகழத்துவது முக்கிய நிகழ்வாக அமையும். அந்த வகையில் நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சுதந்திர தினமான இன்று, தொடர்ந்து 11வது முறையாக செங்கோட்டையில் கொடி ஏற்றி அதன் பிறகு முப்படை அரசு மரியாதையை ஏற்று உரை நிகழத்தினர்.