நம் நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒவ்வொரு வருடமும் சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திர வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் நம் நாட்டின் முக்கிய இடங்களான அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் கொடி ஏற்றப்படும். அந்த வகையில் ஒவ்வொரு மாநிலத்தின் முதலைச்சரும் அந்த மாநிலத்தில் கொடி ஏற்றுவார். இந்த வருடம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளித்தில் கொடி ஏற்றினார். பின்னர் அரசு மரியாதையுடன் சென்று தகைசால் தமிழர் விருது, மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார். அதன் பிறகு மக்களுக்காக சில நலத்திட்டடங்களையும் கூறி உரையாற்றினார். இன்று சுதந்திர தினத்தில் எந்த விதமான பிரச்சனையும் உருவாகமல் இருக்க சென்னையில் காவல் துறையினர் பாதுகாப்புகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. மேலும் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதித்துள்ளனர்.