• Home
  • Sports
  • ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற மனு பக்கர் சென்னை வேளம்மாள் நெக்ஸஸ் பள்ளிக்கு வருகை
News

ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற மனு பக்கர் சென்னை வேளம்மாள் நெக்ஸஸ் பள்ளிக்கு வருகை

8

ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கங்களை வென்ற மனு பக்கர் நேற்று சென்னையில் நடைபெற்ற வேளாம்மாள் நெக்ஸஸ் விளையாட்டு உதவிதொகை விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில், பங்கேற்ற இவரை மாணவர்கள் சிறப்பாக மலர்மாலை அணிவித்து வரவேற்றனர். மாணவர்களின் கோரிக்கைகளுக்கு இனங்கி அவர்களுடன் பாட்டு பாடுதல், நடனம் என அனைத்திலும் பங்குபெற்று அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தார். நம் அனைவருக்கும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையாக அறிமுகமான இவர் சிறு வயது முதலே குத்துச்சண்டை, கராத்தே என பலவற்றை கற்றுள்ளார். நேற்று இவர் நிகழ்ச்சியில் தான் சில மாதம் ஓய்வு எடுக்க உள்ளதாகவும் அதன் பிறகு மீண்டும் தனது விளையாட்டை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சென்னை வேளம்மாள் நெக்ஸஸ் பள்ளியில் உதவி தொகை பெற்றவர்களுக்கு 2.7 கோடி மதிப்பிலான காசோலையும் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts