2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த வீராங்கனை போட்டியில் இந்தியாவின் சார்பில் வினேஷ் போகத் பங்கேற்றார். இவர், மல்யுத்த போட்டியின் அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், இன்று இறுதி சுற்று போட்டியில் வினேஷ் போகத் குறிப்பிட்ட எடையை விட 100கிராம் அதிகமாக இருப்பதாகக் கூறி அவரை மல்யுத்த போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளார்கள். இந்தியா முழுவதும் இவர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியுட்டும் விதமாக அமைந்துள்ளது. மக்கள் அனைவரும் வினேஷ் போகத் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர். அதே சமயம் திரைப்பிரபலங்களில் முதலாவதாக சமந்தா அவர்கள் வினேஷ் போகத்திற்க்கு ஆதரவாக அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நீங்கள் தனியாக இல்லை” என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.