A.R ரஹ்மான் இசைக்கு உலகெங்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது, தொன்னூறுகளில் இருந்து இன்றுவரை இவரது இசையை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. அவர் இசையமைத்த முதல் படத்திலேயே தேசிய விருதும் அதன் பிறகு ஆஸ்கர் விருது, கிராமி விருது, BAFTA விருது, Golden Globe விருது, தமிழ்நாடு மாநில விருது, 15 Filmfare விருது, 17 Filmfare விருது தெற்கு, Padma Bhushan வாங்கி குவித்தார் என்பது குறிப்பிடதக்கது.
அதன் வரிசையில் இப்போது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்துக்காக 18 வது பிலிம்பேர் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறந்த இசை இயக்குநருக்காக பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டது. இதனை அவர் தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் ஷேர் செய்து பொன்னியின் செல்வன் படகுழுவுக்கு நன்றிகளும் தெரிவித்து பகிர்ந்துள்ளார்.