முதன் முறையாக த்ரிஷா நடிப்பில் வெளியாகயுள்ள “பிருந்தா” வெப் தொடர் ஒரு க்ரைம் திரில்லர் வெப் தொடர் ஆகும். இந்த தொடரில் த்ரிஷா ஒரு போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த கதைக்களம் முழுவதும் ஒரு கொலை வழக்கை கொண்டு நகர்கிறது. இந்த வெப் தொடரின் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த வெப் தொடர் நாளை (அகஸ்ட் 02) Sony Liv OTT தளத்தில் வெளியாகயுள்ள நிலையில் இந்த தொடரின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இத்தொடர் தமிழ்,தெலுங்கு, இந்தி, மலையாளம்,மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியாகயுள்ளது. இத்தொடர் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.