நாளை சுதந்திர தினத்தில் வெளியாக உள்ள தங்கலான் திரைப்படம் மக்களின் ஆர்வத்தை பெரிதும் கவர்ந்து வருகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் ஆதி தமிழர்களின் வாழ்வியலை கூறும் இக்கதை பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இக்கதையின் கதாப்பாத்திரங்கள் சினிமா ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. திரைத்துறையினர் பலரும் தங்கலான் படக்குழுவிற்க்கு படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர், நடிகர் மற்றும் இயக்குனரான சீமான் அவர்கள் தங்கலான் போன்ற ஆகச்சிறந்த படைப்புகள் தமிழில் உருவாகத் துணை நிற்குமாறு மக்களை பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனவும், படக்குழுவில் பணியாற்றிய அனைவரையும் வாழ்த்தியும் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.