மாரி செல்வராஜ் தனது முதல் படத்தின் மூலமே மக்களை பெரிதும் தன் பக்கம் கவர்ந்தவர். பெரிதும் சாதி பாகுபாடு பற்றிய திரைப்படங்களை எழுதி இயக்கி வருகிறார். இவரின் முதல் திரைப்படமான பரியேறும் பெருமாள் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. அதன் பிறகு தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தைத் இயக்கினார். அதனை தொடர்ந்து மாமன்னன் என்னும் திரைப்படத்தை எடுத்தார். ஒரு எம். எல் . ஏ வாக இருக்கும் நபருக்கே இந்த சாதி பாகுபாடு மூலம் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதை பற்றி இந்த படம் பேசியுள்ளது. இந்த திரைப்படமும் ஹிட் அடுத்தது. இது வரை இவர் இயக்கிய அனைத்து படங்களும் சாதி பாகுபாடுகள் பற்றியும், அதனால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் எடுத்து கூறியுள்ளார். அதனை தொடர்ந்து இப்பொழுது வாழை என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் முழுவதும் பள்ளி சிறுவர்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில், திவ்யா துரைச்சாமி, நிகிலா விமல், பிரியங்கா மற்றும் கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இன்று மாலை 5 மணிக்கு இவர் இயக்கியுள்ள வாழை திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகிறது. இதற்கு முன்னரே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தக் கதைக்களத்தில் மாரி செல்வராஜ் என்ன பேசியிருக்கிறார் என்று பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இன்று, மாலை டிரெய்லர் மூலம் இந்த திரைப்படத்தின் கதைகளத்தை அறியலாம்.