2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “கே.ஜி.எப்” இப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது. இதில் நடிகர் யாஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2022 ல் வெளியிடப்பட்டு மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவாகியது. இதன் பிறகு இவரின் ரசிகர்கள் இவருடைய அடுத்த படம் எப்பொழுது என்று எதிர்பார்த்திருந்தனர். இப்பொழுது, இவர் “டாக்சிக்” (toxic) என்ற படத்தில் கமிட்டாகி உள்ளார். இந்தப் படம் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய ஒரு ஆக்ஷன் திரில்லர் கலந்த ஒரு சுவாரஷ்யமான கதைகளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த திரைப்படத்தினை கீது மோகன்தாஸ் அவர்கள் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் தொடக்கத்திலே இந்த திரைப்படம் எப்ரல் 10, 2025 அன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. கே.ஜி.எப் போன்று இதுவும் ஒரு வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.
யாஷ் அவர்களின் புது லுக்கில் டாக்சிக் (toxic) திரைப்பட பூஜையின் போது எடுத்த புகைப்படம்.